ஆன்மிகம்
ரமலான் நோன்பு

ரமலான் நோன்பு நாளை தொடங்குகிறது: தமிழக தலைமை ஹாஜி அறிவிப்பு

Published On 2021-04-13 02:49 GMT   |   Update On 2021-04-13 02:49 GMT
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.
ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர்ஆன் அருளப்பட்டது.

இந்த ஆண்டுக்கான ரமலான் மாத பிறை நேற்று (திங்கட்கிழமை) தமிழகத்தில் தென்படவில்லை. எனவே நாளை (புதன்கிழமை) முதல் ரமலான் நோன்பு தொடங்கும்.

இதற்கான அறிவிப்பை தமிழக அரசு தலைமை ஹாஜி சலாகுதீன் முகம்மது அய்யூப் வெளியிட்டுள்ளார்.
Tags:    

Similar News