செய்திகள்
ஆர்ப்பாட்டம்

மணிகண்டம் அருகே சேறும், சகதியுமான சாலையை சீரமைக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

Published On 2021-11-23 14:00 GMT   |   Update On 2021-11-23 14:00 GMT
திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வரை நன்றாக இருந்த தார்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்தது. தற்போதைய மழையால் சேறும்-சகதியுமாக மாறி விட்டது.
மணிகண்டம்:

மணிகண்டம் ஒன்றியம், நாகமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட சிலம்புடையான்பட்டியில் சுமார் 150 குடியிருப்புகள் உள்ளது. இப்பகுதியில் ஒரு தனியார் இரும்பு தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் இருந்து சுமார் 70 டன் அளவிற்கு தினமும் டாரஸ் லாரியில் இரும்புகளை ஏற்றிச் செல்வதால் சிலம்புடையான்பட்டியில் இருந்து திருச்சி-மதுரை தேசிய நெடுஞ்சாலை வரை நன்றாக இருந்த தார்சாலை ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக சேதமடைந்தது. தற்போதைய மழையால் சேறும்-சகதியுமாக மாறி விட்டது. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை அந்த தனியார் தொழிற்சாலை முன்பு திரண்டு அவ்வழியே எந்தவித லாரியும் செல்லக்கூடாது என்று முட்களை வெட்டி போட்டு அப்பகுதியில் நின்றவாறு சாலையை சேதப்படுத்திய தனியார் தொழிற்சாலையை கண்டித்தும் அதை சீரமைத்து கொடுக்காத ஊராட்சி மற்றும் ஒன்றிய நிர்வாகத்தை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதுகுறித்து தகவலறிந்த மணிகண்டம் போலீசார் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம், சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதன்பேரில் கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News