செய்திகள்
பாலகிருஷ்ணன் தனது மனைவியுடன் சிதம்பரத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியில் வாக்குபதிவு செய்தார்.

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை மக்கள் விரும்பி உள்ளனர்- பாலகிருஷ்ணன்

Published On 2021-04-06 07:18 GMT   |   Update On 2021-04-06 07:18 GMT
சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமைக்கும் என மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
சிதம்பரம்:

தமிழகம் முழுவதும் வாக்கு பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கியது. சிதம்பரத்தில் மானாசந்து பகுதியில் உள்ள அரசினர் நடுநிலை பள்ளியில் மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று காலை 7.30 மணி அளவில் வாக்கு பதிவு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் மக்கள் அமைதியான முறையில் வாக்களித்து வருகின்றனர். ஆட்சி மாற்றத்தை எதிர் பார்த்து மக்கள் வந்துள்ளனர். பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி சேர்ந்ததால் தமிழகத்தில் மக்களுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றிபெற்று ஆட்சி அமையும். பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வு பாதிப்பு ஆளும்கட்சிக்கு எதிரான அலையை உருவாக்கி உள்ளது. மக்களுக்கு வாங்கும் சக்தி தற்போது குறைந்துள்ளது.

வேலைவாய்ப்பு அளிக்கும் அனைத்து நிறுவனங்களும் ஸ்தம்பித்துள்ளது. இதனால் மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சி மீது கோபம் ஏற்பட்டுள்ளது. இந்த தேர்தலில் அ.தி.மு.க.-பா.ஜ.க. கூட்டணி படுதோல்வி அடையும் என்ற பயத்தில் எதிர்கட்சியினர் மீது வருமானவரி சோதனையை உள்நோக்கத்துடன் நடத்தி உள்ளனர். வருமானவரித்துறை பா.ஜ.க.வின் கைக்கூலியாக மாறி உள்ளது.

தேர்தல் தோல்வி பயத்தால் அ.தி.மு.க.வினர் ஆளும்கட்சி தமிழகத்தில் 5 தொகுதியில் தேர்தலை நிறுத்த வேண்டும் என்று மனு கொடுத்துள்ளது. இதன் மூலம் தோல்வியை அ.தி.மு.க.வினர் தற்போது ஒத்துக்கொண்டுள்ளனர். மத்திய அரசிடம் இருந்து மாநில அரசு போதுமான நிதியை கேட்டுபெற முடியாத திராணியற்ற அரசாக உள்ளது. எனவே தான் மக்களிடம் இந்த ஆட்சி மீது வெறுப்பு ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் இன்று காலை 7.35 மணி அளவில் திண்டிவனத்தில் காளியம்மன்கோவில் தெருவில் உள்ள ஸ்ரீமரகதாம்பிகை ஆரம்ப பள்ளியில் தனது குடும்பத்தினருடன் வந்து ஓட்டுபோட்டார்.

அப்போது ராமதாஸ் கூறுகையில், தி.மு.க.வுக்கு ஆதரவான கருத்து கணிப்புகள் வெளியானது. இது கருத்து கணிப்பு அல்ல. கருத்து தினிப்பு நான் 7-வது முறையாக ஜனநாயக கடமையாற்றி உள்ளேன். காமராஜர், கக்கன் காலத்தில் நல்ல அரசியல் விமர்சகர்கள் இருந்தார்கள். ஆனால் இன்று தாயை பற்றி தரம்தாழ்ந்து பேசும் அளவுக்கு அரசியல் உள்ளது.

இந்த தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெறும் என்றார்.
Tags:    

Similar News