செய்திகள்
விக்கிரமங்கலம் அருகே மது விற்ற 2 பெண்கள் கைது
விக்கிரமங்கலம் அருகே மது விற்பனையில் ஈடுபட்ட 2 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் ஸ்ரீபுரந்தான் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மது விற்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி ஸ்ரீபுரந்தான் கிழக்கு தெருவை சேர்ந்த கமலா(வயது 32), ஸ்ரீபுரந்தான் மெயின்ரோட்டை சேர்ந்த கவிதா(42) ஆகியோருடைய வீடுகளில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் வீட்டின் பின்புறம் விற்பனை செய்வதற்காக மறைத்து வைத்திருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கமலா, கவிதா ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.