உள்ளூர் செய்திகள்
விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்ற காட்சி.

போக்சோ சட்டம் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு

Published On 2022-01-06 10:45 GMT   |   Update On 2022-01-06 10:45 GMT
போலீஸ் அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டு மாணவிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
திருப்பூர்:

பாலியல் குற்றங்களுக்கு எதிராக பள்ளி மாணவிகளுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு  வருகிறது. இதில் போலீஸ் அதிகாரிகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் கலந்து கொண்டு பல்வேறு ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர். பாலியல் குற்ற தண்டனைகள் குறித்தும் விளக்கம் அளித்து வருகின்றனர்.

இந்தநிலையில் திருப்பூர் ஊத்துக்குளி சாலையில் உள்ள என்.ஆர்.கே. அரசு பள்ளியில்  போக்சோ சட்டம் குறித்து பள்ளி மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாணவிகள் பலர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு போக்சோ சட்டம் குறித்து சைபர் க்ரைம் போலீசார் விளக்கம் அளித்தனர்.
Tags:    

Similar News