செய்திகள்
கோப்புபடம்.

மின்கம்பங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற உத்தரவு

Published On 2021-10-10 09:25 GMT   |   Update On 2021-10-10 09:25 GMT
மின் கம்பங்களில் பலதரப்பட்ட வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன.
திருப்பூர்

மின் கம்பங்களில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை அகற்ற வேண்டும் என மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. 

இதுகுறித்து உடுமலை மின் பகிர்மான வட்ட மேற்பார்வைப் பொறியாளர் ராஜாத்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

உடுமலை மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட பகுதிகளில் உள்ள மின் கம்பங்களில் பலதரப்பட்ட வர்த்தக நிறுவனங்களின் விளம்பரப் பதாகைகள் வைக்கப்பட்டுள்ளன. இதனால், மின் வாரிய ஊழியர்கள் கம்பங்களில் ஏறி பணி மேற்கொள்ள இடையூறாக உள்ளது. 

எனவே, மின் கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள விளம்பரப் பதாகைகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தாங்களாகவே முன் வந்து உடனடியாக அகற்றிக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் விளம்பரப் பதாகைகளை அகற்றாத நிறுவனங்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News