செய்திகள்
கமல்ஹாசன்- பழ.கருப்பையா

மக்கள் நீதி மய்யத்தில் இணைந்தார் பழ.கருப்பையா

Published On 2021-02-27 06:36 GMT   |   Update On 2021-02-27 06:36 GMT
மக்கள் நீதி மய்யத்தின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ந்தேதி வெளியாகும் என அதன் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை:

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சியின் அலுவலகத்தில் அதன் தலைவர் கமல்ஹாசன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

மக்கள் நீதி மய்யத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. பழ. கருப்பையா இணைந்தார். சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் சார்பில் பழ.கருப்பையா போட்டியிடுவார்

சட்டப் பஞ்சாயத்து இயக்கம், மக்கள் நீதி மய்யத்துடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும்.

மார்ச் 1-ந்தேதி முதல் வேட்பாளர் நேர்காணல் நடைபெறும். பொன்ராஜ், ரங்கராஜ், செந்தில் ஆறுமுகம், சுரேஷ் அய்யர் ஆகியோர் நேர்காணலை நடத்துகின்றனர். முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் மார்ச் 7-ந்தேதி வெளியாகும். மார்ச் 3-ந்தேதி முதல் பிரசாரம் மேற்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News