உள்ளூர் செய்திகள்
நில அளவை துறை இயக்குனரிடம் சம்பத் எம்.எல்.ஏ. மனு அளித்தகாட்சி.

வாய்க்கால் வீதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம்- சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2022-05-07 08:17 GMT   |   Update On 2022-05-07 08:17 GMT
வாய்க்கால் வீதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டும் என்று சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

முதலியார் பேட்டை தொகுதி வாய்க்கால் வீதியில் வசிப்பவர்களுக்கு மாற்று இடம் வழங்க வேண்டுமென நில அளவை துறை இயக்குனர் ரமேசிடம் சம்பத் எம்.எல்.ஏ. கோரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

முதலியார்பேட்டை வாய்க்கால் வீதியில் 45-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.  வாய்க்காலின் மீது குடியிருப்பு அமைத்துள்ளதால் பெரும் சுகாதார கேட்டில் இவர்கள் அவதியுற்று வாழ்ந்து வருகின்றனர். 

மேலும் மழைக்கா லங்களில் இவர்களின் வீடுகள் அனைத்தும் மழை நீரால் சூழப் படுகின்றது. இது மட்டும் இல்லாமல் இந்த வாய்க்கால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் நீரோட்டம் தடைபட்டு, வாய்க்கால் நீர் வரத்து பகுதிகளான ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினியர் காலனி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் வெள்ளக்காடாக மாறிவருகின்றது.

இந்த தொகுதியின் பிரதான பிரச்சினைகளில் முதலில் நிற்பது இந்த பிரச்சினையாக உள்ளது. எனவே இந்தப் பகுதியில் வசிக்கும் 45-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு மாற்று இடம் தருவதாக முந்தைய ஆட்சியில் இருந்தவர்களால் பல ஆண்டுகளாக ஏமாற்ற ப்பட்டு வருகின்றனர்.

இவர்களுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற முனைப்பில் நான் தொகுதி முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று அரசிற்கு சொந்தமான இடம் காலியாக உள்ளதா என்று ஆய்வு செய்தேன். பெரும்பாலான இடங்கள் ஆக்கிரமிக்கபட்டு உள்ளது. 
இது தொடர்பாக தனியாக ஒரு மனுவை விரைவில் தங்களிடம் அளிக்கின்றேன். 

தேங்காய்த்திட்டு வருவாய் கிராமம் அடங்கிய காலியிடம் தேங்காய்த்திட்டு சுடுகாடு செல்லும் பாதையில் உள்ளது இவற்றை ஏரி வாய்க்கால் வீதியில் வசிக்கும் மக்களுக்கு பகிர்ந்தளித்தால் 40 ஆண்டுக்கு மேலாக இன்னல்களை அனுபவித்தவர்களுக்கு நிரந்தர தீர்வாக அமையும்‌. எனவே இவர்களுக்கு இந்த இடத்தை ஒதுக்கி தர தேவையான நடவடிக்கையை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். 

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News