செய்திகள்
உல்லாசம்

ஈரோடு மினி பஸ் நிலையத்தில் இளம்ஜோடி போதையில் ‘செக்ஸ்’ உல்லாசம்

Published On 2019-09-13 10:15 GMT   |   Update On 2019-09-13 10:15 GMT
ஈரோடு மினி பஸ் நிலையத்தில் நள்ளிரவில் 1 மணி நேரம் இளம் ஜோடி போதையில் ‘செக்ஸ்’ உல்லாசத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு:

ஈரோடு பஸ் நிலையத்தில் பிக் பாக்கெட் ஆசாமிகள் மற்றும் வழிப்பறி திருடர்களை போலீசார் கண்காணித்து ஒரு பக்கம் நடவடிக்கை எடுத்து வந்தாலும் மறு பக்கம் காதல் ஜோடி மற்றும் கள்ளக்காதல் ஜோடியினரும் தங்களது செக்ஸ் விளையாட்டில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

குறிப்பாக ஈரோடு மினி பஸ் நிலையத்தில் நடக்கும் சமூக விரோத செயல்கள் ஏராளம்... இதை யாரும் கண்டு கொள்ளாததால் அங்கு இப்போது காதல் விளையாட்டும் தாராளம்!

மினி பஸ் நிலையத்துக்கு பஸ் ஏற வருவது போல் சில ஜோடிகள் வந்து அங்குள்ள இருக்கையில் அமர்ந்து அங்கும், இங்கும் நோட்ட மிட்டு செக்ஸ் குறும்பில் ஈடுபடுவதை பலர் பார்த்து முகம் சுழித்து உள்ளனர்.

பொதுவாக மினி பஸ் நிலையத்தில் பயணிகள் கூட்டம் அதிகம் வராததால் இது அவர்களுக்கு ‘செம’ குஷியாகி விடுகிறது. இதனால் மினி பஸ் நிலையம் மன்மத லீலைகளின் கூடாரமாகவே மாறி போனது என்று கூட கூறலாம்.

நேற்று இரவு ஒரு படி மேலே ஒரு இளம் ஜோடி மிகவும் வரம்பை மீறி நடந்து கொண்டது.

நேற்று இரவு 11 மணி அளவில் ஈரோடு மினி பஸ் நிலையத்துக்கு ஒரு வாலிபருடன் ஒரு இளம்பெண் வந்தார். இருவரும் போதையில் இருந்தனர்.

பஸ் ஏற வந்தது போல் வந்த இவர்கள் பிறகு மினி பஸ் நிலையத்தில் திடீரென படுத்து கொண்டனர். அதன் பிறகு தான் அவர்கள் வரம்பு மீறி நடக்க தொடங்கினர். இரவு நேரம் ஆள் நடமாட்டம் இல்லாத நேரம் போதை வேறு... கேட்கவா வேண்டும். அந்த பெண் முதலில் வாலிபர் மீது கையை போட்டு அணைத்தார். அந்த வாலிபர் கையை எடுத்து அப்புறப் படுத்தினாலும் அந்த போதை பெண் விடவில்லை. மீண்டும்... மீண்டும் அந்த வாலிபரை உசுப்பேற்ற சிறிது நேரத்தில் அந்த வாலிபரும் அந்த பெண்ணை அணைக்க சுமார் 1 மணி நேரம் அந்த ஜோடி செக்ஸ் உல்லாசத்தில் ஈடுபட்டது.

அந்த வழியாக வெளியூர் போய் பஸ்சில் திரும்பிய சில பயணிகள் இந்த கண்றாவியை பார்த்து முகம் சுழித்தப்படி சென்றனர்.

ஈரோடு பஸ் நிலையத்தில் திருட்டை தடுக்க சி.சி.டி.வி. கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது. ஆனால் இப்படி செக்ஸ் உல்லாசத்தில் ஈடுபடுவர்களையும் போலீசார் கண்டறிந்து விரட்டியடிக்க வேண்டும். மினி பஸ் நிலையத்தையும் அடிக்கடி கண்காணிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News