ஆன்மிகம்
உடன்குடியில் அய்யா நிழல் தாங்கலில் பால்முறை திருவிழா
உடன்குடியில் அய்யா நிழல் தாங்கலில் அய்யா அன்ன வாகனத்தில் பவனி, குதிரை வாகனத்தில் பவனி வருதல், பக்தர்களுக்கு உம்பான் தர்மம் வழங்குதல், சந்தனக்குடம் நேமிசம் எடுத்தல், பூஞ்சப்பரத்தில் பவனி போன்றவை நடைபெற்றது.
உடன்குடி சந்தையடியூர் அய்யா நிழல் தாங்கல், தாகம் தணிந்த பதி என அழைக்கப்படும் முக்கிய பதியாகும். இங்கு ஆடி மாத பால்முறை திருவிழா சிறப்பாக நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 13-ந் தேதி தொடங்கியது. தினந்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
அய்யா அன்ன வாகனத்தில் பவனி, குதிரை வாகனத்தில் பவனி வருதல், பக்தர்களுக்கு உம்பான் தர்மம் வழங்குதல், சந்தனக்குடம் நேமிசம் எடுத்தல், பூஞ்சப்பரத்தில் பவனி போன்றவை நடைபெற்றது. வழி நெடுகிலும் அய்யாவிற்கு சுருள் வைத்து வழிபட்டனர். திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை சந்தையடியூர் அய்யா வழி மக்கள் செய்திருந்தனர்.
அய்யா அன்ன வாகனத்தில் பவனி, குதிரை வாகனத்தில் பவனி வருதல், பக்தர்களுக்கு உம்பான் தர்மம் வழங்குதல், சந்தனக்குடம் நேமிசம் எடுத்தல், பூஞ்சப்பரத்தில் பவனி போன்றவை நடைபெற்றது. வழி நெடுகிலும் அய்யாவிற்கு சுருள் வைத்து வழிபட்டனர். திருவிழா நாட்களில் காலை, மதியம், இரவு அன்னதானம் வழங்கினர். ஏற்பாடுகளை சந்தையடியூர் அய்யா வழி மக்கள் செய்திருந்தனர்.