செய்திகள்
கோப்புபடம்

டிஎன்பிஎல் கிரிக்கெட்: நெல்லை-திருப்பூர் அணிகள் இன்று பலப்பரீட்சை

Published On 2021-07-26 10:33 GMT   |   Update On 2021-07-26 10:33 GMT
டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 10-வது லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் அணியும் திருப்பூர் தமிழன்ஸ் அணியும் மோதுகின்றனர்.
சென்னை:

5-வது தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று நடந்த ஆட்டங்களில் திருச்சி வாரியர்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் மதுரை பாந்தர்சையும், திண்டுக்கல் டிராகன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கோவை கிங்சையும் வீழ்த்தின.

டி.என்.பி.எல். போட்டியின் 10-வது லீக் ஆட்டம் இன்று இரவு 7.30 மணிக்கு நடக்கிறது. இதில் நெல்லை ராயல் கிங்ஸ்- திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

நெல்லை அணி தொடக்க ஆட்டத்தில் திருச்சியிடம் தோற்றது. 2-வது ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீசை வீழ்த்தியது. அந்த அணி 2-வது வெற்றி ஆர்வத்தில் உள்ளது.

திருப்பூர் அணி, சேப்பாக் சூப்பர் கில்லீசுடன் மோதிய முதல் ஆட்டம் மழையால் பாதியில் ரத்து செய்யப்பட்டது. 2-வது ஆட்டத்தில் சேலத்திடம் தோற்றது. அந்த அணி முதல் வெற்றிக்காக காத்திருக்கிறது.
Tags:    

Similar News