செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் அருகே பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2020-11-26 06:23 GMT   |   Update On 2020-11-26 06:23 GMT
பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது.
திருப்பூர்:

பி.எஸ்.என்.எல். ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று காலை திருப்பூரில் உள்ள பி.எஸ்.என்.எல். தலைமை அலுவலகம் முன்பு நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்துக்கு கிளை தலைவர் வாலீசன் தலைமை தாங்கினார். பி.எஸ்.என்.எல். ஊழியர்களுக்கு பஞ்சப்படியை ஒரு வருடம் வழங்காமல் நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்தும், அதை உடனடியாக வழங்க கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணை செயலாளர் சுப்பிரமணியம், மாவட்ட தலைவர் முகமது ஜாபர், ஓய்வு பெற்ற பி.எஸ்.என்.எல். ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் சவுந்தரபாண்டியன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News